'ஒலிம்பிக் குறித்து உடனடி முடிவெடுக்க அவசியமில்லை'

'ஒலிம்பிக் குறித்து உடனடி முடிவெடுக்க அவசியமில்லை'

1 mins read

லாஸ் ஏஞ்­சல்ஸ்: 32-வது ஒலிம்­பிக் விளை­யாட்டுப் போட்டி ஜப்­பான் தலை­ந­கர் டோக்­கி­யோ­வில் ஜூலை 24 முதல் ஆகஸ்டு 9ஆம் தேதி வரை நடத்­தப்­ப­டு­கிறது.

உல­கையே புரட்­டி­போட்டு விட்ட கொரோனா கிருமித் தொற்று, ஒலிம்­பிக் போட்­டி­யை­யும் அச்­சு­றுத்­திக் கொண்­டி­ருக்­கிறது.

இந்த நிலை­யில் அமெ­ரிக்க நீச்­சல் சங்­கம் ஒலிம்­பிக் போட்­டியை ஓராண்­டுக்குத் தள்ளி வைக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்தி இருக்­கிறது. அமெ­ரிக்க நீச்­சல் சங்­கத்­தின் தலைமை நிர்­வாகி டிம் ஹின்­செய், 'கொரோனா அச்­சம் மற்­றும் கட்­டுப்­பா­டு­க­ளால் அமெ­ரிக்க நீச்­சல் வீரர், வீராங்­க­னை­க­ளின் பயிற்சி வெகு­வாக பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

"வீரர்­க­ளின் நலன் கருதி ஒலிம்­பிக்கை தள்­ளி­வைக்க குரல் கொடுக்க வேண்­டும்," என்று வலி­யு­றுத்தி அமெ­ரிக்கா ஒலிம்­பிக் கமிட்­டிக்கு கடி­தம் எழு­தி­யி­ருக்­கி­றார். ஆனால் இதனை ஏற்க அமெ­ரிக்கா ஒலிம்­பிக் மற்­றும் பாரா­ஒ­லிம்­பிக் கமிட்டி மறுத்து விட்­டது. இதன் தலை­வர் சுசானே லயன்ஸ் கூறு­கை­யில், 'டோக்­கியோ ஒலிம்­பிக்கை திட்­ட­மிட்­ட­படி நடத்­து­வதா அல்­லது தள்­ளி­வைப்­பதா? என்­பது குறித்து அவ­ச­ரப்­பட்டு இப்­போதே முடிவு எடுக்க வேண்­டிய அவ­சி­யம் இல்லை. ஏனெ­னில் ஒலிம்­பிக் அடுத்த வாரமோ அல்­லது 2 வாரங்­க­ளி­லேயோ தொடங்­க­வில்லை. இன்­னும் 4 மாதங்­கள் முழு­மை­யாக இருக்­கின்றன.

"முடிவு எடுப்­ப­தற்கு முன்­பாக நிபு­ணர்­க­ளி­டம் இருந்து ஆலோ­ச­னை­க­ளை­யும், தக­வல்­க­ளை­யும் பெற வேண்டி உள்­ளது என்று சர்­வ­தேச ஒலிம்­பிக் கவுன்­சில் (ஐ.ஓ.சி) கூறி­யி­ருக்­கிறது. அதை நாங்­கள் ஏற்­றுக்­கொள்­கி­றோம்," என்­றார்.