லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா கிருமி வேகமாகப் பரவி வருகிறது. அங்கு உயிர் இழப்பு ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதையடுத்து இங்கிலாந்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. காற்பந்துப் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இங்கிலாந்து கிக்கெட் வாரியமும் கொனோரா கிருமித் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகளை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்து இருக்கிறது. இதையடுத்து இங்கிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட் உள்ளிட்ட எந்த போட்டியையும் மே 28ஆம் தேதி வரை நடத்த வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளது. கவுண்டி கிரிக்கெட் போட்டி தொடர் 7 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

