பெர்ன்: இவ்வாண்டு மே மாதத்தில் நடைபெறுவதாக இருந்த சாம்பியன்ஸ் லீக், யூரோப்பா லீக், மகளிர் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிகளை ஒத்திவைப்பதாக ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்கள் ஒன்றியம் (யூஃபா) அறிவித்துள்ளது.
“மாற்றுத் தேதிகள் குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை,” என்று யூஃபா தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக தற்போது இந்த மூன்று லீக் தொடர்களுடன் கிட்டத்தட்ட ஐரோப்பிய நாடுகளின் உள்ளூர் லீக் போட்டிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக, இவ்வாண்டு நடைபெறவிருந்த யூரோ போட்டிகளை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பதாக யூஃபா கடந்த வாரம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி மே 30ஆம் தேதியும் யூரோப்பா லீக் இறுதிப் போட்டி மே 27ஆம் தேதியும் இடம்பெறவிருந்தன.