தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.50 லட்சத்திற்கு அரிசி: வறியவர்களின் பசி போக்கும் கங்குலி

1 mins read
2eb8788a-b75a-45f6-84af-f69e8b0c8fd6
-

கோல்­கத்தா: இந்­திய கிரிக்­கெட் அணி­யின் முன்­னாள் தலை­வ­ரும் இந்­திய கிரிக்­கெட் கட்­டுப்­பாட்டு வாரி­யத்­தின் இப்­போ­தைய தலை­வரு­மான சௌரவ் கங்­குலி 50 லட்ச ரூபாய்க்கு அரிசி வாங்­கித் தரு­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்­ளார்.

கொரோனா கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக இந்­தி­யா­வில் 21 நாட்­கள் முடக்­க­நிலை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால், அன்­றா­டம் கூலி வேலை செய்­து­வ­ரும் தொழி­லா­ளர்­களும் அவர்­தம் குடும்­பத்­தி­ன­ரும் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாகக் கூறப்படுகிறது.

இந்த நிலை­யில், பாது­காப்பு கார­ணங்­க­ளுக்­காக மேற்கு வங்க மாநில அர­சுப் பள்­ளி­களில் தங்­க­வைக்­கப்­பட்டு உள்­ளோரின் பசி தீர்க்கும் வகை­யில் 'லால் பாபா' அரிசி நிறு­வ­னத்­து­டன் இணைந்து ரூ.50 லட்­சத்­திற்கு அரிசி வாங்­கித் தரு­வ­தாக கங்­குலி அறி­வித்­துள்­ளார் என்று வங்­காள கிரிக்­கெட் சங்­கம் ஓர் அறிக்கை மூலம் கூறி­யி­ருக்­கிறது.

கங்­கு­லி­யின் இந்த முயற்சி, மற்ற குடி­மக்­களும் இதே­போன்று நற்­செ­யல்­களில் ஈடு­பட்டு, சமூ­கத்­தில் பின்­தங்­கி­யுள்­ளோ­ருக்­குக் கைகொ­டுப்­பதை ஊக்­கு­விப்­ப­தாக இருக்­கும் என்­றும் அச்­சங்­கம் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளது.

இந்தியாவில் இதுவரை 600க்கு மேற்பட்டோரைக் கிருமி தொற்றி இருக்கிறது.