சுரேஷ் ரெய்னாவை பாராட்டிய இந்தியப் பிரதமர்

சுரேஷ் ரெய்னாவை பாராட்டிய இந்தியப் பிரதமர்

1 mins read
8e3a1c5c-60bf-47f9-9e5b-4b0fa039c95c
கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்காக 52 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கியுள்ள சுரேஷ் ரெய்னா. படம்: ஐஏஎன்எஸ் -

புது­டெல்லி: இந்­திய கிரிக்­கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிராக இந்தியப் பிர­த­ம­ரின் நிவா­ரண நிதி மற்­றும் உ.பி. மாநில அர­சின் நிவா­ரண நிதிக்கு 52 லட்ச ரூபாய் நிதி­யு­தவி வழங்­கி­யுள்ளார்.

இந்­நி­லை­யில், கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான போருக்காக 52 லட்­சம் ரூபாய் நிதி­யு­தவி வழங்­கிய கிரிக்­கெட் வீரர் சுரேஷ் ரெய்­னா­வுக்கு இந்தியப் பிர­த­மர் நரேந்திர மோடி பாராட்டு தெரி­வித்­துள்­ளார்.

இது­தொ­டர்­பாக, பிர­த­மர் மோடி வெளி­யிட்­டுள்ள டுவிட்­டர் பதி­வில், சுரேஷ் ரெய்­னா­வின் அற்­பு­த­மான 50 எனப் பாராட்டு தெரி­வித்­துள்­ளார்.

கொரோனா தடுப்பு நட­வ­டிக்­கைக்­காக இந்­திய கிரிக்­கெட் கட்­டுப்­பாட்டு வாரி­ய­மான பிசி­சிஐ 51 கோடி ரூபாயை பிர­த­ம­ரின் நிவா­ரண நிதி கணக்­கிற்கு நன்­கொ­டை­யாக வழங்­கி­யுள்­ளது.