சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் டேவிட் வார்னர் (படம்), தலையை மொட்டையடித்துக் கொண்டு, கிருமித் தொற்று பாதிப்பில் மக்களுக்காகப் போராடும் மருத்துவர்களுக்குத் தன்னுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
மொட்டையடித்துக் கொண்ட வார்னர், தன்னுடைய சக வீரர் ஸ்டீவ் ஸ்மித், இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி ஆகிய இருவரையும் அவ்வாறு செய்யும்படி சவால் விடுத்துள்ளார்.
வார்னர் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் மொட்டையடித்த காணொளியைப் பதிவிட்டு, “மக்களுக்காகப் பணியாற்றுவோருக்கு ஆதரவாக என் தலையை மொட்டையடிக்கப் பரிந்துரைக்கப்பட்டேன்.
"என்னுடைய அறிமுகத்தின் போது இதைச் செய்தேன் என்று நினைக்கிறேன். பிடித்திருக்கிறதா, இல்லையா,” என்று அதற்குத் தலைப்பிட்டார்.
சிட்னி மார்னிங் ஹெரால்டு செய்திப்படி, கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, ஆஸ்திரேலியாவின் இறப்பு எண்ணிக்கை 19ஆக உள்ளது.