பல்வேறு நிவாரண நிதிகளுக்கு ரோகித் சர்மா நன்கொடை

பல்வேறு நிவாரண நிதிகளுக்கு ரோகித் சர்மா நன்கொடை

1 mins read
8753a3f6-7b9d-44f6-8edb-be0e2cf7101a
பிர­த­ம­ரின் நிவா­ரண நிதி உள்­ளிட்ட பல்­வேறு தேவை­க­ளுக்கு 80 லட்ச ரூபாய் நன்­கொடை அளித்­துள்­ளார் இந்­திய கிரிக்­கெட் வீரர் ரோகித் சர்மா. படம்: ஊடகம் -

மும்பை: பிர­த­ம­ரின் நிவா­ரண நிதி உள்­ளிட்ட பல்­வேறு தேவை­க­ளுக்கு 80 லட்ச ரூபாய் நன்­கொடை அளித்­துள்­ளார் இந்­திய கிரிக்­கெட் வீரர் ரோகித் சர்மா.

கொரோனா கிருமி பாதிப்­பால் ஏற்­பட்­டுள்ள பொரு­ளா­தார நெருக் கடி­யி­லி­ருந்து மீள்­வ­தற்கு தாரா­ள­மாக நிதி வழங்க பிர­த­மர் மோடி இந்­திய மக்­க­ளுக்கு அழைப்பு விடுத்­தி­ருந்­தார். மேலும், பல்வேறு மாநில முதல்வர்களும் நிதியுதவி வழங்க அழைப்பு விடுத்திருந்தனர்.

இதற்கு பல்­வேறு பிர­ப­லங்­கள், நிறு­வ­னங்­கள் உள்­ளிட்­டோர் நிதி­யு­தவி வழங்கி வரு­கி­றார்­கள்.

இந்­நி­லை­யில் இந்­திய கிரிக்­கெட் அணி­யின் நட்­சத்­திர ஆட்­டக்­கா­ர­ரான ரோகித் சர்மா, பிர­த­ம­ரின் நிவா­ரண நிதிக்கு 45 லட்­சம் ரூபா­யும் மகா­ராஷ்­டிர முதல்­வ­ரின் நிவா­ரண நிதிக்கு ரூ.25 லட்­ச­மும் ஃபீடிங் இந்­தியா மற்­றும் ஆத­ர­வில்­லாத நாய்­க­ளின் நல­னுக்­கான அமைப்பு ஆகி­ய­வற்­றுக்கு தலா ரூ.5 லட்­ச­மும் வழங்­கி­யி­ருப்­ப­தாக தனது டுவிட்­டர் பக்கத்தில் பதி­விட்­டுள்­ளார்.