டாக்கா: கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு காரணமாக மக்கள் கடும் துன்பத்துக்கு ஆளாகி உள்ளனர். பங்ளாதேஷ் கிரிக்கெட் வீரர் மொசாடெக் ஹோசைன் நலிந்த குடும்பங்களுக்கு உணவு மற்றும் ஆடைகள் வழங்கி உதவி செய்துள்ளார்.
கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த பெரும்பாலான நாடுகளில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நலிந்த குடும்பத்தினர் உணவு இன்றி தவித்து வருகிறார்கள். ‘‘ஒவ்வொருவரும் நலமாக இருக்க வேண்டும். கிருமித்தொற்றிலிருந்து இவர்கள் விடுபடுவார்கள் என்று நம்புகிறேன். என்னால் முடியும் அளவிற்கு நான் உதவி செய்கிறேன்.
“ஒவ்வொருவரும் அவர்கள் தகுதிக்கு ஏற்ப ஏழை மக்களுக்கு உதவி செய்ய முன் வரவேண்டும்,” என்றார் பங்ளாதேஷில் நலிந்தவர்களுக்கு உதவி செய்த மொசாடெக் ஹோசைன்.