கொவிட்-19 கிருமித்தொற்று நிலவரத்தால் இங்கிலிஷ் பிரிமியர் லீக் (இபிஎல்) காற்பந்து ஆட்டங்கள் கடந்த மார்ச் மாதத்திலிருந்து தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டுள்ளன.
இம்மாதம் 18ஆம் தேதி இபிஎல் மீண்டும் தொடங்கும் வரை காற்பந்து ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.
காற்பந்து ஆட்டங்கள் இன்னும் தொடங்கவில்லையே என்ற காற்பந்து ரசிகர்களின் ஏக்கம் தொடர, இங்குள்ள ரசிகர்களுக்காக மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு இம்மாதம் ‘ஃபிபா20’ எனும் விளையாட்டுப் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இணையம்வழி நடத்தப்படும் இந்த ‘பிளேஸ்டேஷன்4’ விளையாட்டுப் போட்டி இம்மாதம் 13, 14, 20, 21 ஆகிய தேதிகளில் நடக்கும்.
13ஆம் தேதி இப்போட்டிக்கான தகுதிச்சுற்று தொடங்கும்.
அதற்கு மறுவாரம் நடக்கும் இறுதிச் சுற்று ஆட்டங்களை மான்செஸ்டர் சிட்டி குழுவின் அதிகாரத்துவ ஃபேஸ்புக் தளத்தில் நேரடியாக காணலாம்.
போட்டியின் வெற்றியாளருக்கு $2,000 பரிசுத் தொகையும் மான்செஸ்டர் சிட்டி குழுவின் ரசிகர்களுக்கான விற்பனை பொருட்களும் காத்திருக்கின்றன.
இப்போட்டியில் கலந்துகொண்டு உங்களது விளையாட்டுத் திறனை வெளிக்காட்ட ஆசையா?
https://play.eslgaming.com/fifa/playstation/fifa20-ps4/open/man-city-cup என்ற இணையப் பக்கத்திற்கு சென்று இப்போட்டிக்கு நீங்கள் பதிவுசெய்யலாம்.