லண்டன்: 1990ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக இங்கிலிஷ் பீரிமியர் லீக் காற்பந்து பட்டத்தை வென்றது நிர்வாகி கிளோப் தலைமையிலான லிவர்பூல் குழு.
நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் செல்சி குழுவை 2-1 என வீழ்த்தியதன் மூலம் லிவர்பூலின் முப்பது ஆண்டு கால கனவு நனவானது.
இன்னும் ஏழு ஆட்டங்கள் எஞ்சியிருக்க, லிவர்பூல் அணி நடப்புத் தொடரில் இதுவரை 28 வெற்றிகள், 2 சமநிலை, 1 தோல்வி என 86 புள்ளிகளுடன் 23 புள்ளிகள் முன்னிலை பெற்று முதலிடத்தில் உள்ளது.
ஆட்டத்திற்குப் பிறகு பேசிய லிவர்பூல் நிர்வாகி கிளோப், “மகிழ்ச்சியைச் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. நம்பமுடியாத ஒன்று.
“நான் முப்பது ஆண்டுகள் காத்திருக்கவில்லை, என்றாலும் நான்கரை ஆண்டுகளாக காத்திருக்கிறேன். அதுவும் மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு எங்களால் தொடர்ந்து செல்ல முடியுமா என்று யாருக்கும் தெரியாது,” என்றார்.