முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் சவுகான் கிருமித்தொற்றால் உயிரிழப்பு

முன்னாள் கிரிக்கெட் வீரர் சேத்தன் சவுகான் கிருமித்தொற்றால் உயிரிழப்பு

1 mins read
c3f12577-7f88-4055-84cf-42363d95b26e
-

லக்னோ: இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் நடப்பு அமைச்சருமான சேத்தன் சௌகான் கொரோனா கிருமித் தொற்றால் உயிரிழந்துள்ளார். 73 வயதான அவர் கடந்த ஜூலை மாதமே தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்காக 40 டெஸ்ட் மற்றும் 7 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவர் சேத்தன் சௌகான்.