மீண்டும் போலிஸ் அதிகாரியாக அருண் விஜய்

நடி­கர் அருண் விஜய் அண்மையில் தன்­னு­டைய 43வது பிறந்த நாளை ஆத­ரவற்­றோருடன் கொண்­டா­டி­னார். திரை­யு­ல­கப் பிர­ப­லங்­களும் அவ­ரது

ரசி­கர்­களும் அவ­ருக்குப் பிறந்­த­நாள் வாழ்த்­துகள் தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

அருண் விஜய் 1995ஆம் ஆண்டு சுந்­தர் சி இயக்­கத்­தில் வெளி­யான ‘முறை மாப்­பிள்ளை’ என்ற படத்­தின் மூலம் தமிழ்த் திரை­யு­ல­கில் அறி­மு­க­மா­னார். தொடர்ந்து பல அடி­கள் சினி­மா­வில் வங்­கி­ய­போ­தும் அருண் விஜய் தனது விடாமுயற்­சி­யைக் கைவிடவில்லை.

‘பிரி­யம்’, ‘கங்கா கௌரி’, ‘இயற்கை’, ‘பாண்­ட­வர் பூமி’ என்று பல படங்­களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்­ப­டுத்­தி­ய­போ­தும் அவ­ரால் திரை­யு­ல­கில் பெரிய அள­வில் சாதிக்க முடி­ய­வில்லை.

2015ஆம் ஆண்டு அஜித் நடிப்­பில் வெளி­யான ‘என்னை அறிந்­தால்’ படத்­தின் மூலம் திரை­யு­ல­கில் அருண் விஜய்க்கு தங்க கதவு திறந்­தது.

அந்­தப் படத்­தி­லி­ருந்து அவ­ரு­டைய திரை வாழ்க்கை சூடு­பி­டிக்க ஆரம்­பித்­தது. பின்­னர் ‘குற்­றம் 23’, ‘தடம்’, ‘மாஃபியா’, ‘செக்­கச் சிவந்த வானம்’ உள்­ளிட்ட படங்­கள் மூலம் தனது மார்க்­கெட்டை உயர்த்­தி­னார் அருண் விஜய்.

தற்­போது தமிழ் சினி­மா­வில் தனக்­கென தனி இடத்­தைப் பிடிக்க அய­ராது உழைத்து வரு­கி­றார்.

பொது­வாக அருண் விஜய் தின­மும் புகைப்­ப­டங்­கள் வெளி­யி­டு­வது வழக்­கம். உடற்­ப­யிற்சி செய்­வது, தனது செல்­லப் பிரா­ணி­க­ளு­டன் விளை­யா­டு­வது உள்­ளிட்ட புகைப்­ப­டங்­களை ரசி­கர்களு­டன் பகிர்ந்­து­கொள்­வார்.

தற்­போது தனது பிறந்­த­நாளை ஆத­ர­வற்­றோர் இல்­லத்­தில் கொண்­டா­டிய புகைப்­ப­டங்­களை வெளி­யிட்டு, “இவர்­க­ளின் புன்­ன­கை­யைப் பார்ப்­பது மற்­றும் இவர்­க­ளின் விருப்­பங்­களை நிறை­வேற்­று­வதே எனது பிறந்தநாளுக்கு நான் விரும்­பும் சிறந்த தொடக்­க­மா­கும்.

“இது என் இத­யத்தை முழு­மை­யாக்­கு­கிறது. உங்­கள் அரு­மை­யான வாழ்த்­து­கள் மற்­றும் ஆசீர்­வா­தங்­க­ளுக்கு அனைவருக்­கும் நன்றி,” என்று தெரி­வித்­துள்­ளார்.

இயக்­கு­நர் ஜி.என்.ஆர். கும­ர­வே­லன் இயக்­கத்­தில் அருண் விஜய் ‘சினம்’ என்ற படத்­தில் நடித்து வரு­கி­றார். முன்பு இவர் நடித்­தி­ருந்த ‘குற்­றும் 23’ படத்­திற்­குப் பிறகு மீண்­டும் காவல் அதி­கா­ரி­யாக இந்­தப் படத்­தில் நடித்து வரு­கி­றார்.

பல்­லக் லால்­வானி கதா­நா­ய­கி­யாக நடிக்­கி­றார். அருண் விஜய்­யின் தந்­தை­யும் நடி­க­ரு­மான விஜ­ய­கு­மார் இந்­தப் படத்­தைத் தயா­ரிக்­கி­றார். இப்­ப­டத்­திற்கு ஷபீர் இசை­ய­மைக்­கி­றார்.

அருண் விஜய்­யின் பிறந்­த­நாளை முன்­னிட்டு ‘சினம்’ படக்­கு­ழு­வி­னர் சுவ­ரொட்டி ஒன்றை வெளி­யிட்டு வாழ்த்து தெரி­வித்­த­னர். அந்த சுவ­ரொட்­டியை நடி­கர் விஜய் சேது­பதி வெளி­யிட்­டார்.

இந்­தப் படத்­தைத் தொடர்ந்து அருண் விஜய் ‘மூடர் கூடம்’ நவீன் இயக்­கத்­தில் ‘அக்­னிச் சிற­கு­கள்’ என்ற படத்­தி­லும் ‘பாக்­ஸர்’ என்ற படத்­தில் ரித்­திகா சிங்­கு­டன் நடித்து வரு­கி­றார். இயக்­கு­நர் மிஷ்­கின் இயக்­கத்­தி­லும் நடிக்க இருக்­கி­றார்.

இவ­ரின் தங்­கை­யின் கண­வர் இயக்­கு­நர் ஹரி, சூர்­யாவை வைத்து ‘அருவா’ படத்தை எடுக்க இருக்­கி­றார். அதன் பிறகு ஹரி­யின் இயக்­கத்­தில் அருண் விஜய் நடிக்க இருப்­ப­தாக கூறப்­ப­டு­கிறது.

இவர் 2006ஆம் ஆண்டு பிர­பல திரைப்­பட தயா­ரிப்­பா­ள­ரின் மக­ளான ஆரத்தி என்­ப­வரை திரும­ணம் செய்துகொண்­டார். இவ­ருக்கு பூர்வி என்ற மகளும் அர்­னவ் என்ற மக­னும் இருக்­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!