ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வரலாற்று வெற்றியைப் பெற்று தொடரையும் கைப்பற்றியது.
இன்று 328 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரிஷப் பண்ட் 89 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். மேலும் ஆட்ட நாயகனாகவும் தேர்வானார்.
இந்த வெற்றியின் மூலம் ‘பார்டர் - கவாஸ்கர்’ கிண்ணத்தை இந்தியா தக்க வைத்துள்ளது.
கிண்ணத்தைப் பெற்றதும் அதை இந்திய அணியின் மிக இளம் வீரரான நடராஜனிடம் கொடுத்து அழகு பார்த்தார் அணித் தலைவர் ரகானே. பின்னர் இந்திய வீரர்கள் தேசியக் கொடியுடன் திடலில் வலம் வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.