மகளிர் கிரிக்கெட்: 10,000 ஓட்டங்கள் எடுத்த முதல் இந்திய வீராங்கனை

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையே மகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவும் இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்றது. இந்நிலையில், நேற்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய மகளிர் அணி முதலில் பந்தடித்தது.

இந்தப்போட்டியின் மூலம் இந்திய மகளிர் அணித் தலைவர் மித்தாலி ராஜ் 10,000 ஓட்டங்களைக் கடந்தார். அத்துடன் 10,000 ஓட்டங்கள் எடுத்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

அனைத்துலக அளவில் 10,273 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வீராங்கனை சார்லட் எட்வர்ட் முதலிடத்தில் இருக்கிறார். இவரை அடுத்து மித்தாலி ராஜ் இப்போது இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

இந்தப் போட்டியில் 36 ஓட்டங்கள் எடுத்து மித்தாலி ராஜ் ஆட்டமிழந்தாலும், அவர் 10,000 ஓட்டங்கள் எடுத்த சாதனை புரிந்ததைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

அனைத்துலக ஒருநாள் போட்டிகளில் மித்தாலி ராஜ் இதுவரை 75 அரை சதமும் 8 சதமும் விளாசியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!