மான்செஸ்டர்: நேற்று முன்தினம் மான்ெசஸ்டர் சிட்டி குழுவும் லீட்ஸ் குழுவும் மோதிய காற்பந்தாட்டத்தில் ஆட்டம் முடியும் தறுவாயில் லீட்ஸ் குழு போட்ட இரண்டாவது கோலால் மான்செஸ்டர் சிட்டி குழு 1-2 என தோல்வியைத் தழுவியது.
ஆட்டம் தொடங்கியதிலிருந்தே லீட்ஸ் குழுவின் முனைப்பான விளையாட்டில் திக்குமுக்காடியது மான்செஸ்டர் சிட்டி.
ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் லீட்ஸின் தற்காப்பு வீரரான டல்லஸ் என்பவர் கோல் போட்டு தமது குழுவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.
ஆனால் முதல் பாதி ஆட்டம் முடியும் முன்னரே லீட்ஸ் குழுவின் தலைவரான லியம் கூப்பர் என்பவர் சிட்டியின் கேப்பிரியல் ஜேசுஸ் என்பவரிடமிருந்து பந்தைப் பெறும் முயற்சியில் அவர் மீது கடுமையாக மோத, அவர் ஆட்டத்திலிருந்து ெவளியேற்றப்பட்டார்.
குழுவின் கேப்டனை இழந்த நிலையில் மீதம் உள்ள பத்து வீரர்களைக் ெகாண்டு லீட்ஸ் குழு முழு மூச்சான தற்காப்பு விளையாட்டில் கவனம் செலுத்தியது.
இருப்பினும், சிட்டியின் ஃபெரன் டோரஸ் என்பவர் லீட்ஸ் குழுவின் தற்காப்பு அரணை உடைத்து ஆட்டத்தின் 76ஆம் நிமிடத்தில் கோல் போட சிட்டி குழு ஆட்டத்தை சமநிலை செய்தது.
இதைத் தொடர்ந்து எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் மான்செஸ்டர் சிட்டி வீரர்கள் கொத்துக் கொத்தாக முன்னேறித் தாக்க, அவ்வப்பொழுது எதிர்த் திசையில் பந்தை செலுத்தி சிட்டி குழுவுக்கு ஆபத்தை ஏற்படுத்தியது லீட்ஸ் குழு.
ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் தமது பாதையில் வந்த பந்தை எடுத்து சிட்டி கோல் நோக்கி ஓடிய டல்லஸ் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் லீட்ஸின் இரண்டாவது கோலைப் போட்டு மான்செஸ்டர் சிட்டி பத்து பேர் மட்டுமே கொண்ட லீட்ஸ் குழுவிடம் தோற்கும் நிலைக்கு அதைத் தள்ளியது.
லீட்ஸ் அணிக்காக இரு கோல்களையும் போட்ட டல்லஸ், "இதில் கிடைத்த வெற்றி பெரு
மதிப்புக்கு உரியது.
"ஏனெனில் ஆட்டம் முழுவதும் சிட்டி குழு ஆதிக்கம் செலுத்தியது. இந்நிலையில், வெற்றி பெற நாங்கள் பெரு முயற்சி மேற்கொள்ள வேண்டியிருந்தது. இதில் எங்கள் குழு ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு செயல்பட்டது," என்று பெருமிதத்துடன் கூறினார்.
அணி நிர்வாகி பெப் கார்டியோலா, "எங்கள் குழுவினர் தவறுகளைச் செய்தாலும் கோல் போடுவதற்கு பல வாய்ப்புகள் கிடைத்தன. ஆயினும் வாய்ப்புகளை நழுவவிட்டோம்," என்றார்.
எனினும் இந்தத் தோல்வி, சிட்டியின் வெற்றிப் பயணத்தைத் தடுத்து நிறுத்திவிடாது.