டெஸ்ட் கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு புதிய விதிமுறைகள்

டெஸ்ட் கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு புதிய விதிமுறைகள்

1 mins read

புது­டெல்லி: இந்­திய கிரிக்­கெட் அணி சொந்த மண்­ணில் நடை­பெற்ற இங்­கி­லாந்­துக்கு எதி­ரான டெஸ்ட் தொடரை 3-1 என கைப்­பற்­றி­யது. இதன் மூலம் அடுத்த மாதம் இங்­கி­லாந்­தில் நடை­பெ­ற­வுள்ள உலக டெஸ்ட் வெற்­றி­யா­ளர் போட்­டி­யின் இறு­திச்­சுற்­றுக்­கும் தகு­தி­பெற்­றது.

இந்­தியா-நியூ­சி­லாந்து அணி­கள் மோதும் உலக டெஸ்ட் வெற்­றி­யா­ளர் இறுதி ஆட்­டம் இங்­கி­லாந்­தின் சௌதாம்ப்­டன் நக­ரில் ஜூன் 18ஆம் தேதி தொடங்­க­வுள்­ளது. இந்த ஆட்­டத்­துக்­கான விதி­மு­றை­களை அனைத்துலக கிரிக்கெட் மன்றம் வெளி­யிட்­டுள்­ளது.

"இறுதி ஆட்­டம் சம­நி­லை­யில் முடிந்­தாலோ ஒரே மாதி­ரி­யான வெற்­றிப்­புள்­ளி­க­ளைப் பெற்­றாலோ இரு அணி­களும் வெற்­றி­யா­ளர்­க­ளாக அறி­விக்­கப்­படும்.

"ஐந்து நாள்­க­ளைத் தாண்டி கூடு­த­லாக ஒரு நாள் (ஜூன் 23) இந்த டெஸ்ட்­டுக்கு ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. ஐந்து நாள்­களில் மழை அல்­லது வேறு கார­ணங்­க­ளால் ஆட்­டம் தடைப்­பட்­டால் இழந்த நேரங்­களை ஐந்து நாள்­க­ளுக்­குள் முடிக்­கா­விட்­டால், கூடு­தல் நாள் பயன்­ப­டுத்­தப்­படும்.

"அதே­நே­ரம் ஐந்து நாள்­க­ளி­லும் முடிவு எட்­டப்­ப­டா­விட்­டால், முடி­வுக்­காக கூடு­தல் நாளைப் பயன்­ப­டுத்த முடி­யாது.

"கூடு­தல் நாளைப் பயன்­ப­டுத்­து­வது தொடர்­பான முடிவை கடைசி நாளின் கடைசி ஒரு மணி நேரத்­தின்­போது நடு­வர் அறி­விப்­பார். ஆட்­டத்­தில் கிரேட் 1 டியூக்ஸ் பந்­து­கள் பயன்­ப­டுத்­தப்­படும்," என் பன புதிய விதிமுறைகள்.