ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்
தோக்கியோ: ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பதக்கக் கணக்கைத் தொடங்கிவைத்தார் பளுதூக்கும் வீராங்கனையான மீராபாய் சானு. 49 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட 26 வயதான மீரா, மொத்தம் 202 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தைத் தமதாக்கினார். 210 கிலோ எடை தூக்கிய சீனாவின் ஹோ ஸிஹுய் தங்கத்தையும் 194 கிலோ எடை தூக்கிய இந்தோனீசியாவின் ஆயிஷா விண்டி கந்திகா வெண்கலத்தையும் தட்டிச் சென்றனர். மீராவின் வெற்றிக்கு டுவிட்டர் வழியாக வாழ்த்து தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, "இதைவிட மகிழ்ச்சியான தொடக்கத்தைக் கேட்க முடியாது. மீராவின் வெற்றி இந்தியர் ஒவ்வொருவர்க்கும் ஊக்கமளிக்கிறது," என்று பதிவிட்டுள்ளார்.