தோக்கியோ: ஒலிம்பிக்கில் எட்டுமுறை தங்கம் வென்றுள்ள இந்திய அணி, தோக்கியோ ஒலிம்பிக் பயணத்தை வெற்றியுடன் தொடங்கி உள்ளது.
ஹர்மன்பிரீத் சிங் இரு கோல்களையும் ரூபிந்தர் பால் சிங் ஒரு கோலையும் அடிக்க, இந்திய அணி 3-2 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. இன்று நடக்கவிருக்கும் இரண்டாவது போட்டியில் இந்திய அணி வலிமைமிக்க ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.

