தோக்கியோ: ஜப்பானிய டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாக்கா ஒலிம்பிக் விளையாட்டுகளின் பெண்கள் ஒற்றையர் போட்டியிலிருந்து எதிர்பாராத விதமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
போட்டியின் மூன்றாம் சுற்றில் செக் குடியரசின் மார்கெட்டா வொண்ட்ரூசோவாவிடம் 6-1, 6-4 எனும் செட் விகிதத்தில் தோல்வியுற்றார் ஒசாக்கா.
பெண்கள் டென்னிஸ் உலகத் தரவரிசையில் முதலிடத்தை வகிக்கும் அஸ்திரேலியாவின் ஏஷ்லேய் பார்டி அண்மையில் போட்டியிலிருந்து எதிர்பாரா வகையில் வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து உலகத் தரவரிசையில் ஆக உயரிய இடத்தில் இருந்த ஒலிம்பிக் வீராங்கனையாக ஒசாக்கா விளங்கினார். ஒவ்வொரு தோல்வியும் தனக்கு வருத்தத்தை தந்தாலும் இந்தத் தோல்விதான் ஆக அதிக வேதனையைத் தருவதாக நான்கு முறை டென்னிஸ் கிராண்ட் சிலாம் விருதுகளை வென்றிருக்கும் ஒசாக்கா தெரிவித்தார். ஆட்டம் முழுவதும் ஒசாக்கா பல தவறுகளைச் செய்தார்.
மனநலப் பிரச்சினையை எதிர்கொண்டதால் சென்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகிக்கொண்ட ஒசாக்காவிற்குக் கடந்த சில மாதங்கள் வருத்தம் தரும் வகையில் அமைந்துள்ளன.