தோக்கியோ: ஒலிம்பிக் விளையாட்டுகளின் ஆண்கள் ஹாக்கி போட்டியின் 'ஏ' பிரிவு ஆட்டத்தில் ஒலிம்பிக் நடப்பு வெற்றியாளர் அணியான அர்ஜென்டினாவை வென்றுள்ளது இந்தியா.
ஆட்டத்தை 3-1 எனும் கோல் கணக்கில் வென்ற இந்தியா போட்டியின் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது.
ஆட்டத்தின் கடைசி இரண்டு நிமிடங்களில் இரண்டு கோல்களை அடித்து அபார வெற்றி கண்டது இந்திய அணி.
முதல் இரண்டு காலாட்டங்களில் கோல்கள் விழவில்லை.
43வது நிமிடத்தில் வருண் குமார் கோலடித்து இந்தியாவை முன்னுக்கு அனுப்பினார்.
48வது நிமிடத்தில் அர்ஜென்டினா ஆட்டத்தை சமநிலை படுத்தியது. அதற்குப் பிறகு 58வது நிமிடத்தில் விவேக் சாகர் பிரசாத்தும், 59வது நிமிடத்தில் ஹர்மன்ப்ரீத் சிங்கும் இந்தியாவிற்கு மேலும் இரண்டு கோல்களை அடித்தனர்.
இந்தியா, அதன் கடைசி 'ஏ' பிரிவு ஆட்டத்தில் போட்டியை ஏற்று நடத்தும் ஜப்பானைச் சந்திக்கும்.
'ஏ' பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 7-1 எனும் கோல் கணக்கில் படுதோல்வி கண்ட இந்தியா நன்கு மீண்டு வந்துள்ளது. 41 ஆண்டுகளில் முதன்முறையாக ஆண்கள் ஹாக்கிப் போட்டியில் ஒலிம்பிக் தங்கம் வெல்லும் இலக்கைக் கொண்டுள்ளது, தன்னம்பிக்கையுடன் விளையாடிவரும் இந்திய அணி.
'ஏ' பிரிவில் இதுவரை ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தைத் தவிர அனைத்து ஆட்டங்களையும் வென்றுள்ளது இந்தியா.

