இந்திய குத்துச்சண்டை வீரர் சதீஷ் வெற்றி

இந்திய குத்துச்சண்டை வீரர் சதீஷ் வெற்றி

1 mins read
140dad41-1f2d-4dd1-9314-d33185c0f873
ஜமைக்காவின்ரிக்கார்டோபிரவுனை வென்று காலிறுதிச்சுற்றுக்குத்தகுதிபெற்றார் இந்திய குத்துச்சண்டைவீரர்சதீஷ் குமார். படம்: ராய்ட்டர்ஸ் -

தோக்­கியோ: ஒலிம்­பிக் விளையாட்டு­க­ளின் ஆண்­கள் குத்துச்­சண்டை போட்­டி­யில் காலிறுதிச் சுற்­றுக்­குத் தகு­தி­பெற்­றுள்­ளார் இந்­திய வீரர் சதீஷ் குமார். அவர் ஜமைக்­கா­வின் ரிக்கார்டோ பிர­வுனை 4-1 எனும் புள்ளிக்­க­ணக்­கில் வென்­றார்.

ஒலிம்­பிக்­கில் சூப்­பர்­ஹெ­வி­வெய்ட் எனப்­படும் பெரும் உயர் எடை குத்­துச்­சண்டை பிரி­வில் முதன்­மு­றை­யா­கப் பங்­கேற்­கும் இந்­திய வீரர் 32 வயது ச­தீஷ்.

ஆசிய குத்­துச்­சண்டை போட்டியில் இரண்டு முறை வெண்கலப் பதக்­கத்தை வென்றிருக்கி­றார்.

தேசிய அள­வி­லும் பல விரு­து­களை வென்­றி­ருக்­கி­றார்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சதீஷ், ஓர் இராணுவ வீரரும்கூட.