தோக்கியோ: தோக்கியோவில் நடந்து வரும் 32வது ஒலிம்பிக் போட்டியில் நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் அரையிறுதி ஆட்டத்தில், உலகின் முன்னணி வீரரும் செர்பியாவை சேர்ந்தவருமான ஜோக்கோவிச், ஜெர்மனியின் அலெக்சாண்டர் வெரவை எதிர்த்தார். பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், ஜோக்கோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ஜோகோவிச்சை எதிர்த்து விளையாடிய அலெக்சாண்டர் வெரவ் 1-6, 6-3, 6-1 செட்களில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்திய ஜோக்கோவிச், ஒலிம்பிக் தொடரில் அரையிறுதியுடன் வெளியேறிவிட்டார்.

