மீண்டும் தங்கத்திற்குக் குறி

மீண்டும் தங்கத்திற்குக் குறி

1 mins read
dedd6729-448a-4e08-bd75-878664d8acee
வெற்றியைக் கொண்டாடும் பிரேசில் காற்பந்து வீரர்கள். படம்: ஏஎஃப்பி -

தோக்­கியோ: ஒலிம்­பிக் விளை­யாட்­டு­களில் ஆண்­கள் காற்­பந்துப் போட்டியின் அரை­யிறு­தி­யாட்­டத்­தில் பெனால்­டி­களில் மெக்­சிக்­கோவை 4-1 எனும் கோல் கணக்­கில் வென்­றது பிரே­சில். ஆட்­டம் கோலின்றி சம­நி­லை­யில் முடிந்­த­தால் பெனால்­டி­க­ளின் மூலம் வெற்­றி­யா­ளர் அணி நிர்­ண­யிக்­கப்­பட்­டது. ஒலிம்­பிக் வர­லாற்­றில் முதன்­மு­றை­யாக ஆண்­கள் காற்­பந்­தில் தங்கம் வென்­றி­ருந்த பிரே­சில், இப்­போது தொடர்ந்து இரண்­டா­வது முறை­யா­கப் போட்­டியை வெல்­லும் வாய்ப்பைப் பெற்­றுள்­ளது.

உலகக் கிண்ணத்தை ஆக அதிக முறை வென்றுள்ளது பிரேசில். ஆனால் ஒலிம்பிக் விளையாட்டுகளில் அணி அவ்வளவு சிறப்பாகச் செய்யாதிருந்தது.

இம்முறை தங்கப் பதக்கத்தை வென்றால் அந்த நிலை மாறிவிடும்.

காற்­பந்­தில் தலை­சி­றந்த அணி­யாகக் கரு­தப்­பட்டு வந்த பிரே­சில், கடந்த சுமார் 15 ஆண்­டு­க­ளா­கக் களை­யி­ழந்­து போயி­ருக்­கிறது. உல­கக் கிண்ணப் போட்­டி­க­ளி­லும் அணி சரியாக ஆட­வில்லை.

எனினும் எந்நேரமும் மீண்டுவந்து மறுபடியும் உலகக் காற்பந்தைத் தன்வசப்படுத்தும் ஆற்றல் கொண்ட அணி பிரேசில்.