சிங்கப்பூரில் சுசுகி கிண்ணக் காற்பந்து

சிங்கப்பூரில் சுசுகி கிண்ணக் காற்பந்து

1 mins read

இவ்­வாண்டு டிசம்­பர் 5ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜன­வரி 1ஆம் தேதி­வரை நடக்­க­ இருக்­கும் ஆசி­யான் காற்­பந்­துக் கூட்­ட­மைப்­பின் சுசுகி கிண்­ணப் போட்­டி­களை சிங்­கப்­பூர் ஏற்று நடத்­தும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மொத்­தம் பத்து அணி­கள் இரு பிரி­வு­களாக இப்­போட்­டித் தொட­ரில் மோத­வுள்­ளன.

நான்கு முறை சுசுகி கிண்­ணத்தை வென்­றுள்ள சிங்­கப்­பூர், ஐந்து முறை வெற்­றி­யா­ள­ரான தாய்­லாந்­து­டன் 'ஏ' பிரி­வில் இடம்­பெற்­றுள்­ளது. மியன்­மார், பிலிப்­பீன்ஸ் ஆகி­யவை அப்­பி­ரி­வில் இடம்­பெற்­றுள்ள மற்ற இரு அணி­கள். ஐந்­தா­வது அணி­யாக, தகு­திச்­சுற்­றில் வெற்றி பெறும் அணி இடம்­பெ­றும்.

'பி' பிரி­வில் வியட்­னாம், மலே­சியா, இந்­தோ­னீ­சியா, கம்­போ­டியா, லாவோஸ் ஆகிய அணி­கள் இடம்­பெற்­றுள்­ளன.

டிசம்­பர் 5ஆம் தேதி தேசிய விளை­யாட்­டு அ­ரங்­கில் நடக்­க­ இருக்­கும் முதல் ஆட்­டத்­தில் சிங்­கப்­பூர்-மியன்­மார் அணி­கள் மோத­ இருக்கின்றன.

ஈராண்­டு­க­ளுக்கு ஒரு­முறை நடக்­கும் சுசுகி கிண்­ணப் போட்டி­கள் கடந்த ஆண்டு நடக்க இருந்த நிலை­யில், கொவிட்-19 பர­வல் கார­ண­மாக இவ்­வாண்­டிற்­குத் தள்ளி­வைக்­கப்­பட்­டன.

கொரோனா பர­வல் இன்­னும் முடி­விற்கு வராத நிலை­யில், சுசுகி கிண்­ணப் போட்­டி­களில் பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­க­ளுக்கு மிகுந்த முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­படும். வெளி­நாட்டு அணி­யி­னர் இங்கு வந்­தி­றங்­கி­ய­பின் 'பிசி­ஆர்' சோதனை முடிவு வெளி­வ­ரும்­வரை இரு­நாள்­க­ளுக்கு ஹோட்­டல் அறை­களில் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும்.

2018ஆம் ஆண்டு நடந்த போட்­டி­யில் வியட்­னாம் வெற்றியாளராக வாகை சூடி­யது.