டோஹா: எஃப் 1 கார் பந்தயத்தை கத்தார் முதல்முறையாக நடத்த இருக்கிறது.
அந்த அறிமுகப் பந்தயம் அடுத்த மாதம் 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான பத்தாண்டு ஒப்பந்தத்தில் கத்தார் கையெழுத் திட்டுள்ளது. ஒப்பந்தக் காலம் 2023ஆம் ஆண்டிலிருந்து தொடங்கும். கடந்த மார்ச் மாதம் பஹ்ரேனில் பந்தயம் நடைபெற்றது.