விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்திருக்கின்றனர். இந்தப் படம் விரைவில் 'ஓடிடி'யில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து திரையரங்கு உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இதற்கு முன்பு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்திருந்த 'நானும் ரௌடிதான்' படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
அந்தப் படத்தின்போதுதான் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இடையே காதல் ஏற்பட்டது. இன்றுவரை அந்த காதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
'நானும் ரௌடிதான்' படத்தைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'
படத்திலும் இணைந்துள்ளனர். தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்திற்கும் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
திரையரங்கில் வெளியாக வேண்டிய இந்தப் படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில்
தீபாவளிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.
மேலும் படத்தின் நாயகன் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் 'துக்ளக் தர்பார்' படம் சன் தொலைக்காட்சியிலும் 'லாபம்', 'அனபெல் சேதுபதி' ஆகிய படங்கள் நெட்பிளிக்ஸிலும் வெளியாயின.
அதைப்போல படத்தின் நாயகி நயன்தாரா நடித்திருந்த 'நெற்றிக்கண்' படமும் அண்மையில் நெட்பிளிக்ஸில் வெளியானது. இப்போது இவர்கள் இணைந்து நடிக்கும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படமும் 'ஓடிடி'யில் வெளியாக உள்ளது.
இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. முன்பு கொரோனா கிருமித்தொற்று காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் படங்கள் 'ஓடிடி'யில் வெளியாயின.
தற்பொழுது அனைத்து திரை
யரங்குகளும் திறக்கப்பட்ட நிலை
யிலும் 'ஓடிடி'யில் படம் வெளியாவது குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 'ஓடிடி' வெளியீட்டை தடுக்க முடியாது என்பதால் மறைமுகமாக பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
'ஓடிடி'யில் வெளியான படத்தை திரையரங்கில் வெளியிடமாட்டோம் என்பது அதில் ஒன்று. இந்தக் கட்டுப்பாடு காரணமாக 'சூரரைப்போற்று' திரைப்
படத்தை திரையரங்கில் வெளியிட முடியாமல் போனது.
அதுபோல் ஒரு படம் திரையரங்கில் வெளியானால், நான்கு வாரங்கள் கழித்தே அதனை 'ஓடிடி'யில் வெளியிட வேண்டும் என்பது மற்றொரு கட்டுப்பாடு. இதனை மீறியதால் இந்தியில் வெளியான 'தலைவி' பதிப்பை சில திரையரங்குகளில்
திரையிட இயலவில்லை.
நயன்தாரா, விஜய் சேதுபதி படங்கள் தொடர்ச்சியாக 'ஓடிடி'யில் வெளியாவதால் இவர்கள் இருவர் மீதும் திரையரங்கு உரிமையாளர்கள் மறைமுக நடவடிக்கை எடுக்க வாய்ப்புண்டு என்கின்றனர் கோடம்பாக்க கோடாங்கிகள்.
'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் 'ஓடிடி'யில் வெளியாகிறது