கோபத்தில் திரையரங்கு உரிமையாளர்கள்

விக்­னேஷ் சிவன் இயக்கியிருக்­கும் 'காத்­து­ வாக்­குல ரெண்டு காதல்' படத்­தில் விஜய்­சே­து­பதி, நயன்­தாரா, சமந்தா நடித்­தி­ருக்­கின்­ற­னர். இந்­தப் படம் விரை­வில் 'ஓடிடி'யில் வெளி­யாக இருப்­ப­தாக படக்­குழு அறி­வித்­தது. அத­னைத் தொடர்ந்து திரை­ய­ரங்கு உரி­மை­யா­ளர்­கள் போர்க்­கொடி தூக்கி உள்­ள­னர்.

'தானா சேர்ந்த கூட்­டம்' படத்­திற்­குப் பிறகு விக்­னேஷ் சிவன் இயக்கி இருக்கும் படம் 'காத்­து­வாக்­குல ரெண்டு காதல்'. இதற்கு முன்பு விக்­னேஷ் சிவன் இயக்­கத்­தில் விஜய் சேது­பதி, நயன்­தாரா நடித்­தி­ருந்த 'நானும் ரௌடி­தான்' படம் மிகப் பெரிய அள­வில் வெற்றி பெற்­றது.

அந்­தப் படத்­தின்­போ­து­தான் நயன்­தாரா - விக்­னேஷ் சிவன் இடையே காதல் ஏற்­பட்­டது. இன்றுவரை அந்த காதல் தொடர்ந்து கொண்­டி­ருக்­கிறது.

'நானும் ரௌடி­தான்' படத்­தைத் தொடர்ந்து இந்­தக் கூட்­டணி மீண்­டும் 'காத்­து­வாக்­குல ரெண்டு காதல்'

படத்­தி­லும் இணைந்­துள்­ள­னர். தயா­ரிப்­பா­ளர் லலித் குமார் தயா­ரிக்க, இசை­ய­மைப்­பா­ளர் அனி­ருத் இசை­ய­மைத்­துள்­ளார். இந்­தப் படத்­திற்­கும் ரசி­கர்­க­ளி­டையே அதிக எதிர்­பார்ப்பு நிலவி வரு­கிறது.

திரை­ய­ரங்­கில் வெளி­யாக வேண்­டிய இந்­தப் படம் டிஸ்னி ஹாட்ஸ்­டா­ரில்

தீபா­வ­ளிக்கு வெளி­யிட உள்­ள­தாக படக்­குழு அறி­வித்து இருக்­கிறது.

மேலும் படத்­தின் நாய­கன் 'மக்­கள் செல்­வன்' விஜய் சேது­ப­தி­யின் 'துக்­ளக் தர்­பார்' படம் சன் தொலைக்­காட்­சி­யி­லும் 'லாபம்', 'அன­பெல் சேது­பதி' ஆகிய படங்­கள் நெட்­பி­ளிக்­ஸி­லும் வெளி­யா­யின.

அதைப்போல படத்­தின் நாயகி நயன்­தாரா நடித்­தி­ருந்த 'நெற்­றிக்­கண்' பட­மும் அண்­மை­யில் நெட்­பி­ளிக்­ஸில் வெளி­யா­னது. இப்­போது இவர்­கள் இணைந்து நடிக்­கும் 'காத்­து­வாக்­குல ரெண்டு காதல்' பட­மும் 'ஓடி­டி'­யில் வெளி­யாக உள்­ளது.

இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து திரை­ய­ரங்கு உரி­மை­யா­ளர்­க­ளுக்கு பெரும் கோபத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது. முன்பு கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக திரை­ய­ரங்­கு­கள் மூடப்­பட்ட நிலை­யில் படங்­கள் 'ஓடி­டி'­யில் வெளியாயின.

தற்­பொ­ழுது அனைத்து திரை­

ய­ரங்­கு­களும் திறக்­கப்­பட்ட நிலை­

யி­லும் 'ஓடி­டி'­யில் படம் வெளி­யாவது குறித்து திரை­ய­ரங்கு உரி­மை­யா­ளர்­கள் கடும் எதிர்ப்பு தெரி­வித்து வரு­கின்­ற­னர். 'ஓடிடி' வெளி­யீட்டை தடுக்க முடி­யாது என்­ப­தால் மறை­மு­க­மாக பல கட்­டுப்­பா­டு­களை விதித்து வரு­கின்­ற­னர்.

'ஓடிடி'யில் வெளி­யான படத்தை திரை­ய­ரங்­கில் வெளி­யிடமாட்­டோம் என்­பது அதில் ஒன்று. இந்தக் கட்­டுப்­பாடு கார­ண­மாக 'சூர­ரைப்­போற்று' திரைப்­

ப­டத்தை திரை­ய­ரங்­கில் வெளி­யிட முடி­யா­மல் போனது.

அதுபோல் ஒரு படம் திரை­ய­ரங்­கில் வெளி­யா­னால், நான்கு வாரங்­கள் கழித்தே அதனை 'ஓடிடி'யில் வெளி­யிட வேண்­டும் என்­பது மற்­றொரு கட்­டுப்­பாடு. இதனை மீறி­ய­தால் இந்­தி­யில் வெளி­யான 'தலைவி' பதிப்பை சில திரை­ய­ரங்­கு­களில்

திரை­யி­ட இயலவில்லை.

நயன்­தாரா, விஜய் சேது­பதி படங்­கள் தொடர்ச்­சி­யாக 'ஓடி­டி­'யில் வெளி­யா­வ­தால் இவர்­கள் இரு­வர் மீதும் திரை­ய­ரங்கு உரி­மை­யா­ளர்­கள் மறை­முக நட­வ­டிக்கை எடுக்க வாய்ப்­புண்டு என்­கின்றனர் கோடம்பாக்க கோடாங்கிகள்.

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் 'ஓடிடி'யில் வெளியாகிறது

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!