இடைக்காலப் பயிற்றுநராக டிராவிட்

இடைக்காலப் பயிற்றுநராக டிராவிட்

1 mins read
d3918f66-3ca8-4d28-8edc-83116bd330ac
-
Google News Preferred Icon

புது­டெல்லி: உல­கக் கிண்ண டி20 போட்­டி­க­ளு­டன் தலை­மைப் பயிற்­று­விப்­பா­ளர் ரவி சாஸ்­திரி உட்­பட இந்­திய கிரிக்­கெட் அணி­யின் பயிற்­று­விப்புப் பொறுப்புகளில் இருக்கும் அனைவரது பதவிக்காலமும் முடிவடைகிறது.

இதனையடுத்து, புதிய பயிற்றுவிப்பாளரைத் தேடும் பணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தொடங்கிவிட்டது. ஆயினும், அந்தத் தேடல் பணிக்கு அதிகக் காலம் ஆகலாம் என்பதை வாரியம் உணர்ந்துள்ளது.

அதனால், இடைக்காலமாக அனுபவமிக்க ஒருவர் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்­நி­லை­யில், இந்­திய அணி­யின் முன்­னாள் தலை­வ­ரான ராகுல் டிரா­விட் (படம்) போன்ற ஒருவரிடம் அப்பொறுப்பை ஒப்­ப­டைக்க வாரி­யம் விரும்­பு­வதாக 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி கூறுகிறது.

அணி­யின் முழு­நே­ரப் பயிற்­று­விப்­பா­ள­ராக டிரா­விட்டை நிய­மிக்க வாரி­யம் விரும்­பி­னா­லும் அதி­கம் பய­ணம் செய்ய வேண்­டி­யி­ருக்­கும் என்­ப­தைக் கார­ணம் காட்டி, டிரா­விட் அதனை மறுத்­து­விட்­ட­தாகச் சொல்லப்படுகிறது.

இதனிடையே, ஆஸ்­தி­ரே­லி­யப் பயிற்­று­நர்கள் சிலரும் இந்திய அணிக்குப் பயிற்சியளிக்க ஆர்­வம் காட்டு­வதா­கக் கூறப்­ப­டு­கிறது.