மான்செஸ்டர்: நேற்று முன்தினம் பின்னிரவு நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் செல்சி அணி மால்மோ அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது. ஆனால், ஆட்ட முடிவில் செல்சியின் இரு தாக்குதல் வீரர்களான லுக்காகு, டிமோ வெர்னர் ஆகிய இருவருக்குமே காயம் ஏற்பட்டது.
இனி சிறிது காலத்திற்கு அவர்கள் களமிறங்க முடியாதநிலை அக்குழுவின் நிர்வாகி தாமஸ் டுக்கலுக்கு கவலையளித்துள்ளது.
ஜோர்கின்யோ செல்சி முதல் கோலைப் போட்டார். பின்னர் சரசரவென்று மேலும் மூன்று கோல்களைப் போட்டு செல்சி வென்றது. ஆனால், இதில் மற்றோர் செல்சி வீரரான டிமோ வெர்னருக்கும் காயம் ஏற்பட, செல்சி குழுவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.