செல்சி அபாரம், சிட்டி பரிதாபம்

செல்சி அபாரம், சிட்டி பரிதாபம்

1 mins read
483f3805-c160-4bef-bc9b-afb9b7de8307
நியூகாசல் யுனைடெட்டுக்கு எதிரான ஆட்டத்தில் செல்சிக்கு இரண்டு கோல்களை அடித்தார் ரீஸ் ேஜம்ஸ் (வலது). படம்: ராய்ட்டர்ஸ் -

நியூ­கா­சல்: இங்­கி­லீஷ் பிரி­மி­யர் லீக்­கில் இரண்டு ஆட்­டங்­களில் 10 கோல்­களை அடித்­தி­ருக்­கிறது பட்டி­ய­லில் முத­லி­டம் வகிக்­கும் செல்சி காற்­பந்து அணி. சென்ற வாரம் 7-0 எனும் கோல் கணக்­கில் நோரிச் சிட்டியை வதம் செய்த செல்சி, நேற்று முன்­தி­னம் நியூகாசல் யுனை­டெட்டை 3-0 எனும் கோல் கணக்­கில் வீழ்த்தியது.

அபா­ரத்­தின் உச்­சியை செல்சி தொடக்­கூ­டும் என்ற உணர்வு எழுந்­துள்­ளது. இவ்­வாறே தொடர்ந்து ஆடி­னால் இவ்­வ­ணியை இறக்­கு­வது சிர­மம் என்ற அச்­சம் மற்ற அணி­க­ளுக்கு வர­லாம்.

அதே வேளை­யில் நடப்பு வெற்றி­யா­ளர் அணி­யான மான்­செஸ்­டர் சிட்டி, எதிர்­பாராவித­மாக கிரிஸ்­டல் பேல­ஸி­டம் 2-0 எனும் கோல் கணக்­கில் தோல்­வி­யுற்­றது.

சென்ற பரு­வத்தில் மிகச் சிறப்­பாக ஆடிய சிட்டி­யி­டம் தற்­போது அந்த உத்­வே­கம் குறைந்து காணப்­ப­டு­கிறது. தர­மான முன்­னிலை ஆட்­டக்­கா­ரர் இல்­லா­மல் சிர­மப்­படும் சிட்டிக்­குப் புத்­து­யிர் ஊட்­டும் புதிய விளை­யாட்­டா­ளர்­கள் தேவைப்­ப­ட­லாம்.

வரும் சனிக்கிழமையன்று பரம வைரி­யான மான்­செஸ்­டர் யுனை­டெட்­டைச் சந்­திக்­கவுள்ளது சிட்டி.