'படுதோல்விதான், ஆனாலும் பதற்றம் அடையத் தேவையில்லை'

1 mins read

துபாய்: சுசுகி கிண்ண காற்

­பந்­துப் போட்­டிக்­குத் தயா­ரா­கும் வகை­யில் சிங்­கப்­பூர் குழு, துபா­யில் பத்து நாட்­க­ளுக்­குப் பயிற்­சி­யில் ஈடுபட்டது.

பயிற்­சி­யின் முடி­வில் நேற்று முன்­தி­னம் மொரோக்கோ 'ஏ' அணி­யு­டன் மோதிய சிங்­கப்­பூர், 7-1 எனும் கோல் கணக்­கில்

படு­தோல்வி அடைந்­தது.

படு­தோல்வி அடைந்­துள்­ள­போ­தி­லும் பதற்­றம் அடை­யத் தேவை­யி­வல்லை என்று சிங்­கப்­பூர் குழு­வின் பயிற்­று­விப்­பா­ள­ரான டட்­சுமா யோஷிடா தெரி­வித்­துள்­ளார்.

மொரோக்கோ 'ஏ' அணி

மிக­வும் வலி­மை­மிக்­கது என்­றார் அவர். ஆனால் சுசுகி கிண்­ணத்­தில் சிங்­கப்­பூர் சந்­திக்­க­வி­ருக்­கும் எதி­ர­ணி­க­ளின் தரம் முற்­றி­லும் வேறு என்­றார் அவர். இந்­தத் தோல்­வி­யால் சிங்­கப்­பூர் ஆட்­டக்­கா­ரர்­க­ளின் நம்­பிக்கை கடு­க­ள­வும் குறையவில்லை என்­றார் அவர்.