லண்டன்: இங்கிலாந்தின் யார்க்ஷியர் கிரிக்கெட் அணிக்காகத் தாம் விளையாடியபோது இனவாதச் சொற்களாலும் செயல்
களாலும் பல இன்னல்களைச் சந்தித்ததாக பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட அஸீம் ரஃபிக் (படம்) மனந்திறந்துள்ளார்.
தம்மைப் போன்று பல ஆசிய ஆட்டக்காரர்களும் இழிவுபடுத்தப்பட்டதாக இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் மின்னிலக்க, கலாசார, விளையாட்டுத் துறைக் குழுவிடம் அவர் கண்ணீர் மல்கக் கூறினார். 2008லிருந்து 2014ஆம் ஆண்டு வரையிலும் அதன் பிறகு 2016லிருந்து 2018ஆம் ஆண்டு வரையிலும் யார்க்
ஷியர் அணிக்காக ரஃபிக் விளையாடினார். தாம் 15
வயதாக இருந்தபோது யார்க்
ஷியர் அணியைச் சேர்ந்த
வெள்ளையர்கள் மதுபானத்தைத் தமது வாய்க்குள் வலுக்கட்டாயமாக ஊற்றி குடிக்க வைத்ததாக வேதனையுடன் நினைவுகூர்ந்தார் ரஃபிக். இதுபோன்ற மனதை உருக வைக்கும் பல சம்பவங்களை அவர் பட்டியலிட்டார். இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, அனைத்துலக கிரிக்கெட் ஆட்டங்களை ஏற்று நடத்தும் உரிமையை யார்க்ஷியர் அணிக்குச் சொந்தமான மைதானம் இழந்துள்ளது. அதுமட்டுமல்லாது, பல நட்சத்திர வீரர்களும் விலகிவிட்டனர்.
ரஃபிக்கிடம் யாக்ஷியர் அணி மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

