லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் லீட்ஸ் குழுவை 2-1 எனும் கோல் கணக்கில் ஸ்பர்ஸ் குழு நேற்று முன்தினம் வீழ்த்தியது.
ஆனால் இந்த வெற்றியைப் பதிவு செய்ய ஸ்பர்ஸ் குழு கடுமையாகப் போராட வேண்டியிருந்தது.
அடுத்த பருவத்தில் பிரிமியர் லீக்கில் விளையாட முடியாத அபாயத்தை எதிர்நோக்கும் லீட்ஸ், ஸ்பர்ஸ் குழுவுக்கு எதிராகக்
களமிறங்கியது.
அதுமட்டுமல்ல, காயம், இடைநீக்கம் காரணமாக அதன் முன்னணி வீரர்கள் பலர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது.
இருப்பினும், முற்பாதி ஆட்டம் முடிய ஒரு நிமிடம் மட்டும் எஞ்சிஇருந்தபோது அது கோல் போட்டு முன்னிலை வகித்தது.
இதற்கு முன்பு கடந்த இரண்டு ஆட்டங்களில் கோல் போட முடியாமல் திணறிய ஸ்பர்ஸ் குழுவுக்கு இது மேலும் அதிர்ச்சியை ஏற்
படுத்தியது.
இருப்பினும், விட்டுக்கொடுக்காமல் விளையாடிய ஸ்பர்ஸ், ஆட்டத்தின் 58வது, 69வது நிமிடங்களில் கோல்களைப் போட்டு ஆட்டத்தைக் கைப்பற்றியது.
இந்த வெற்றியின் மூலம் லீக் பட்டியலின் ஏழாவது இடத்துக்கு ஸ்பர்ஸ் முன்னேறியுள்ளது.
"இந்த வெற்றி மீண்டும் எங்களை வெற்றியின் பாதையில் கொண்டு செல்ல வேண்டும். எங்களால் அடுத்தடுத்து வெற்றிகளை சுவைக்க முடியும் என்று எனது ஆட்டக்காரர்களிடம் தெரிவித்துள்ளேன்," என்று ஸ்பர்ஸ் குழுவின் நிர்வாகி அண்டோனியோ கோண்ட்டே தெரிவித்தார்.
மற்றோர் ஆட்டத்தில் எவர்ட்டன் குழுவை 3-0 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி ஓரங்
கட்டியது.
ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் ரஹீம் ஸ்டெர்லிங்கும் 55வது நிமிடத்தில் ரொட்ரியும் 86வது நிமிடத்தில் பெர்னாடோ சில்வாவும் கோல் போட்டு சிட்டிக்கு மூன்று புள்ளி
களைப் பெற்று தந்தனர். லீக்
பட்டியலில் சிட்டி இரண்டாவது இடத்தில் உள்ளது.

