நோம்பேன்: ஐந்தாவது ஆசிய இளையர் விளையாட்டுப் போட்டி 2029ஆம் ஆண்டில் கம்போடியத் தலைநகர் நோம்பேன்னில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய ஒலிம்பிக் மன்றத்தின் போட்டி ஒன்றை கம்போடியா ஏற்று நடத்துவது இதுவே முதன்முறையாகும்.
2034ஆம் ஆண்டு ஆசியான் விளையாட்டுப் போட்டி சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் நடைபெறும். 2025ல் தற்காப்புக் கலைப் போட்டியை நடத்த சவூதி விண்ணப்பித்துள்ளது.

