பியூனஸ் அய்ரஸ்: காற்பந்து உலகின் ஜாம்பவானும் அர்ஜெண்டினாவின் காற்பந்து சகாப்தமுமான டியேகோ மரடோனாவின் ஓராண்டு நினைவு தினத்தை உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் நேற்று முன்தினம் அனுசரித்தனர்.
அர்ஜெண்டினாவில் நேற்று முன்தினம் காற்பந்து ஆட்டங்கள் தொடங்குவதற்கு முன்பு மரடோனாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதுமட்டுமல்லாது, மரடோனாவின் சீருடை எண் 10. அதற்கு ஏற்ப அந்த எண்ணின் வடிவில் ஆட்டக்காரர்கள் வரிசையாக நின்றனர். அர்ஜெண்டினாவிலும் இத்தாலியின் நேப்பல்ஸ் நகரிலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். நேப்பல்ஸ் நகரின் நெப்போலி குழுவுக்காக மரடோனா விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.