ரியோ டி ஜெனிரோ: பிரேசிலின் முன்னாள் ஒலிம்பிக் குழுவின் தலைவரான கார்லோஸ் ஆர்த்தர் நுஸ்மனுக்கு 30 ஆண்டுகள் 11 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கான வாக்குகளை விலைக்கு வாங்கிய குற்றத்திற்காகத் திரு நுஸ்மனுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த ஒலிம்பிக் விளையாட்டுகளை ஏற்று நடத்தும் உரிமையை பிரேசிலின் ரியோ டிஜெனிரோ நகருக்கு வழங்குவதற்காக நுஸ்மன் வாக்குகளை வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. தண்டனைக்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.