சிங்கப்பூர்: 'ஸ்போர்ட்ஸ் ஹப்' மையத்தில் அமைந்துள்ள சிங்கப்பூரின் தேசிய விளையாட்டு அரங்கம் மீண்டும் நேரடி ரசிகர்களை வரவேற்கவுள்ளது. அடுத்த மாதம் தொடங்கவுள்ள சுசுக்கி கிண்ணக் காற்பந்துப் போட்டி ஆட்டங்களைக் காண ரசிகர்கள் மீண்டும் தேசிய அரங்கிற்குச் செல்லலாம்.
அடுத்த மாதம் ஐந்தாம் தேதியன்று இப்போட்டியில் மியன்மாருக்கு எதிராகத் தனது முதல் ஆட்டத்தை ஆடவுள்ளது சிங்கப்பூர். தேசிய அரங்கிற்கு அதிகபட்சமாக 55,000 ரசிகர்கள் வரலாம். கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குக் கட்டுப்பாடுகள் நடப்பில் இருப்பதால் ஒவ்வோர் ஆட்டத்திற்கும் 10,000 ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.