சிங்கப்பூர்: தென்கிழக்காசியாவின் தேசிய காற்பந்து அணிகளுக்கான சுசுகி கிண்ணப் போட்டியில் மியன்மார் புத்துயிர் பெற்றுள்ளது. நேற்று திமோர் டெஸ்டெயை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது இப்போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் சிங்கப்பூரிடம் மோசமாகத் தோல்வியுற்ற மியன்மார்.
நேற்று மாலை நடைபெற்ற இந்த 'ஏ' பிரிவு ஆட்டத்தில் தான் பாய்ங், மாவ்ங் மாவ்ங் லுவின் ஆகியோர் மியன்மாருக்கு கோல்களைப் போட்டனர்.
இப்பிரிவில் இன்னும் தாய்லாந்தையும் பிலிப்பீன்சையும் மியன்மார் சந்திக்கவேண்டும். இவ்விரு அணிகளையும் வெல்வது சவாலானது. அதிலும் தாய்லாந்து சுசுகி கிண்ணத்தை ஆக அதிக முறை வென்றுள்ள அணி. மியன்மார் இதுவரை கிண்ணத்தை வெல்லவில்லை. நாளை மறுதினம் தாய்லாந்துடன் மியன்மாரும் மோதும்.

