லண்டன்: காயம் காரணமாக ஏற்பட்ட வலியையும் பொருட்படுத்தாது ஆட்டத்தின் கடைசிக்
கட்டத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி பந்தை வலைக்குள் சேர்த்து செல்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஜார்ஜினோவை அக்குழுவின் நிர்வாகி தாமஸ் டுக்கல் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
ஆட்டத்தின் முதல் கோலை லீட்ஸ் போட்டது. இருப்பினும், மனந்தளராமல் தொடர்ந்து போராடிய செல்சி மேசன் மவுண்ட் மூலம் ஆட்டத்தைச் சமன் செய்தது.
இடைவேளைக்குப் பிறகு பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி செல்சியின் இரண்டாவரது கோலை ஜார்ஜினோ போட்டார்.
ஆனால் ஆட்டம் முடிய ஏறத்தாழ ஏழு நிமிடங்கள் எஞ்சி
இருந்தபோது லீட்ஸ் குழுவின் ஜோ கெல்ஹார்ட் ஆட்டத்தைச் சமன் செய்தார். ஆட்டம் சமநிலையில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டபோது ஆட்டத்தின் கடைசிக்கட்டத்தில் செல்சிக்கு மீண்டும் ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
அதையும் கோலாக்கி வெற்றியை உறுதி செய்தார் ஜார்ஜினோ.
ஆட்டம் 3-2 எனும் கோல் கணக்கில் செல்சிக்குச் சாதகமாக
முடிந்தது. மற்றோர் ஆட்டத்தில் சௌத்ஹேம்டன் குழுவை 3-0 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் பந்தாடியது. ஒழுங்கீனம் காரணமாக ஆர்சனலின் அணித் தலைவர் ஔபமயாங் களமிறக்கப்படவில்லை. இருப்பினும், நிதானத்துடன் விளையாடிய ஆர்சனல் எதிரணியை எளி்தில் ஓரங்கட்டி மூன்று புள்ளிகளைப் பெற்றது.

