சிங்கப்பூர்: தென்கிழக்காசியக் காற்பந்து அணிகளுக்கான இவ்வாண்டின் சுசுகி கிண்ணப் போட்டியில் முதன்முறையாக வென்றுள்ளது கம்போடியா. 'பி' பிரிவில் லாவோஸை 3-0 எனும் கோல் கணக்கில் கம்போடியா வென்றது.
நேற்று முன்தினம் 'ஏ' பிரிவில் திமோர் டெஸ்டேயை 2-0 எனும் கோல் கணக்கில் வென்று 9 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இப்போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றது சிங்கப்பூர். இப்பிரிவில் தாய்லாந்தும் பிலிப்பீன்ஸை 2-1 எனும் கோல் கணக்கில் வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
நாளை மறுநாள் சிங்கப்பூரும் தாய்லாந்தும் மோதும். வெற்றிபெறும் அணி 'ஏ' பிரிவில் முதலிடத்தைப் பிடிக்கும்.

