அபுதாபி: ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் தலைநகர் அபுதாபியில் நடைபெற்ற ஃபார்முலா ஒன் பந்தய முடிவுக்கு எதிராகத் தான் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று லூயிஸ் ஹேமில்டனின் மெர்சிடிஸ் குழு அறிவித்துள்ளது. மேலும், பந்தயத்தில் வென்று ஃபார்முலா ஒன் உலக விருதை முதன்முறையாக வென்ற மேக்ஸ் வெர்ஸ்டாப்பனுக்கும் அவரின் குழுவான ரெட் புல்லுக்கும் மர்சிடிஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற பந்தயத்தின் கடைசி சுற்றில் வெர்ஸ்டாப்பன், ஹேமில்டனைத் தாண்டிச் சென்று உலக விருைதைக் கைப்பற்றினார். அதற்குப் பிறகு விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை என்று மெர்சிடிஸ் இரண்டு முறை எதிர்ப்பு தெரிவித்தது. ஃபார்முலா ஒன் அதை நிராகரித்தது. முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து மெர்சிடிஸ் பரிசீலித்தது. சர்ச்சைக்குரிய இப்பந்தயம் நடைபெற்ற விதத்தைக் கூர்ந்து ஆராயப்போவதாக அனைத்துலக மோட்டார்பந்தயச் சம்மேளனம் தெரிவித்தது.

