சிங்கப்பூர்: இன்றைய தமிழ் முரசு அச்சுக்கு சென்ற நேரத்தில் தான் படைத்த வரலாற்றையே முறியடித்து அடுத்த கட்டத்திற்குச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் சிங்கப்பூரின் பூப்பந்து வீரர் லோ கியென் இயூ. ஆகக் கடைசி நிலவரப்படி லோவும் இந்தியாவின் கிடிம்பி ஸ்ரீகாந்தும் உலக பூப்பந்துப் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதியாட்டத்தில் மோதிக்கொண்டிருந்தனர்.
இப்போட்டியின் இறுதியாட்டத்திற்கு சிங்கப்பூர் முதன்முறையாக முன்னேறியது. லோ வெள்ளிப் பதக்கம் வெல்வதே சாதனைதான். தங்கம் வென்றால் சிங்கப்பூருக்கு இரட்டிப்பு இன்பம்.
ஆண்கள் பூப்பந்தில் உலகத் தரவரிசையில் 14ம் இடத்தை வகிக்கிறார் இந்தியாவின் ஸ்ரீகாந்த். 2018 காமன்வெல்த் விளையாட்டுகளில் இடம்பெற்ற ஆட்டத்தில் இவர் லோவை வென்றார்.