சுசுகி கிண்ண இறுதிச் சுற்றை நெருங்கியுள்ள தாய்லாந்து

சுசுகி கிண்ண இறுதிச் சுற்றை நெருங்கியுள்ள தாய்லாந்து

2 mins read
fed880fd-c2aa-420c-8157-ab17c8714ff2
தாய்லாந்தின் முதல் கோலைப் போடும் சனதீப் சொங்கிராசின் (வலது). அவரைத் தடுக்க வியட்னாமிய கோல்காப்பாளர் விரைந்தும் பலனில்லாமல் போனது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர்: சுசுகி கிண்ண காற்

­பந்­துப் போட்­டி­யின் இறு­திச் சுற்று ஆட்­டத்தை தாய்­லாந்து நெருங்­கி­உள்­ளது.

நேற்று முன்­தி­னம் இரவு நடை­பெற்ற அரை­யி­று­திச் சுற்­றின் முதல் ஆட்­டத்­தில் அது வியட்­னா­மைச் சந்­தித்­தது.

இதில் 2-0 எனும் கோல் கணக்­கில் தாய்­லாந்து வாகை சூடி­யது.

தென்­கி­ழக்­கா­சிய காற்­பந்து ஜாம்­ப­வா­னா­கக் கரு­தப்­படும் தாய்­லாந்து, இது­வரை ஐந்து முறை சுசுகி கிண்­ணத்தை ஏந்­தி­யுள்­ளது.

தேசிய விளை­யாட்­ட­ரங்­கத்­தில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற ஆட்­டத்தை நேரில் காண 7,365

ரசி­கர்­கள் திரண்­ட­னர்.

இரு குழுக்களும் தாக்குதலில் தீவிரம் காட்டும் ஆற்றல்மிக்கவையாக திகழ்வதால், ஆட்டம் தொடங்கியதும் கோல் வேட்டை சூடுபிடித்தது.

ஆட்டம் தொடங்கி சில நிமிடங்களிலேயே வியட்னாமிய தற்காப்பில் ஏற்பட்ட கவனச் சிதறல், தாய்லாந்தை வெற்றிப் பாதைக்குக் கொண்டு சென்றது.

ஆட்­டத்­தின் 14வது நிமி­டத்­தில் வியட்­னா­மிய தற்­காப்பு ஆட்­டக்­

கா­ரர் செய்த பிழை­யைத் தமக்­குச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்தி பந்தை வலைக்­குள் சேர்த்­தார் தாய்­லாந்­தின் நட்­சத்­திர வீரர் சன­தீப் சொங்­கி­ரா­சின்.

அடுத்த பத்து நிமி­டங்­க­ளுக்­குள் தாய்­லாந்­தின் இரண்­டா­வது கோலை­யும் அவர் போட்­டார்.

ஆட்­டத்­தின் 23வது நிமி­டத்­தில் பந்தை மிக அழ­கா­கத் தங்­கள்

கட்­டுக்­குள் வைத்­துக்­கொண்டு தாக்குதல் நடத்திய தாய்­லாந்து ஆட்­டக்­கா­ரர்­கள், வியட்­னா­மிய தற்­காப்பு ஆட்­டக்­கா­ரர்­க­ளைத்

திக்­கு­முக்­காட வைத்­த­னர்.

28 வயது சன­தீப்­பி­டம் பந்து சென்­ற­போது அதை மின்­னல் வேகத்­தில் வலைக்­குள் புகுத்­தி­னார்.

ஆட்­டத்­தின் 85வது நிமி­டத்­தில் தாய்­லாந்­துக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்­தது. அதை சன­தீப் எடுத்­தார். அதை மட்­டுமே அவர் கோலாக்­கி­யி­ருந்­தால் தாய்­லாந்­துக்­காக அவர் போட்ட முதல்

ஹாட்­ரிக்­காக அது பதி­வாகி இருந்­தி­ருக்­கும்.

ஆனால் அவர் அனுப்­பிய பந்து நேராக வியட்­னா­மிய கோல்­காப்­பா­ள­ரி­டம் சென்­றது.

பந்து வலைக்­குள் செல்­லா­த­படி கோல்­காப்­பா­ளர் பார்த்­துக்­கொள்ள, மூன்­றா­வது கோல் போடும் வாய்ப்பை தாய்­லாந்து நழு­வ­விட்­டது.

இருப்­பி­னும், இறுதி வரை வியட்­னா­மிய குழு­வால் கோல் போட முடி­யா­மல் போன­தால் 2-0 எனும் முன்­னி­லை­யு­டன் தாய்­லாந்து வலு­வான நிலை­யில் உள்­ளது.

இவ்­விரு குழுக்­க­ளுக்­கும் இடை­யி­லான அரை­யி­று­திச் சுற்­றின் இரண்­டா­வது ஆட்­டம் நாளை மறு­நாள் தேசிய விளை­யாட்­ட­ரங்­கத்­தில் நடை­பெ­று­கிறது.

நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற ஆட்­டத்­துக்கு முன்பு வியட்­னா­முக்கு எதி­ராக எந்த ஒரு குழு­வும் கோல் போட­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. அதற்­குத் தாய்­லாந்து முற்­றுப்­புள்ளி வைத்து விட்­டது.

இறு­திச் சுற்­றுக்­குத் தகுதி பெற வேண்­டு­மா­யின் அடுத்த ஆட்­டத்­தில் வியட்­னாம் குறைந்­தது மூன்று கோல்­கள் போட்டு தாய்­லாந்து கோல் போடா­த­படி பார்த்­துக்­கொள்ள வேண்­டும்.

ஆனால் பலம் பொருந்­திய தாய்­லாந்­துக்கு எதி­ராக அவ்­வாறு செய்­வது சவால்­மிக்­க­தா­கும்.

அடுத்த ஆட்­டத்தை வியட்­னாம் 2-0 எனும் கோல் கணக்­கில் கைப்­பற்­றி­னால் ஒட்­டு­மொத்த கோல் அடிப்­ப­டை­யில் 2-2 எனும் கோல் கணக்­கில் ஆட்­டம் சம­நி­லை­யில் முடி­யும்.

அப்­படி ஒரு நிலை ஏற்­பட்­டால், வெற்­றி­யா­ளரை நிர்­ண­யிக்க கூடு­தல் நேரம் கொடுக்கப்படும்.

அதி­லும் வெற்றி கோல் போடப்­ப­டாத பட்­சத்­தில் பெனால்டி முறை­யில் வெற்­றி­க் குழு நிர்­ண­யிக்­கப்­படும்.