சிங்கப்பூர்: சுசுகி கிண்ண காற்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற சிங்கப்பூர் ஆட்டக்காரர்கள் முனைப்புடன் உள்ளனர். அதேபோல இந்தோனீசியாவும் கோல் பசியுடன்
காத்துக்கொண்டிருக்கிறது.
இன்றிரவு இவ்விரு அணி
களுக்கும் இடையிலான அரையிறுதிச் சுற்றின் இரண்டாவது ஆட்டம் தேசிய விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது.
முதல் ஆட்டத்தில் இரு குழுக்களும் தரப்புக்கு ஒரு கோல் போட்டு சமநிலை கண்டன. எனவே, வெற்றிக்குக் குறிவைத்து இரு குழுக்களும் இன்று களம்இறங்கும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.
முதல் சுற்று ஆட்டங்களில் கோல் மழை பொழிந்த இந்தோனீசியாவின் தாக்குதல் ஆட்டக்காரர்களைச் சமாளிக்கும் மிகக் கடுமையான சவாலை சிங்கப்பூர் தற்காப்பு ஆட்டக்காரர்கள் மீண்டும் எதிர்கொள்ள இருக்கின்றனர்.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தோனீசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே மிகக் கடுமையான போட்டி நிலவியது. ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் இந்தோனீசியா கோல் போட்டு முன்னிலை வகித்தது.
துவண்டுவிடாமல் போராடிய சிங்கப்பூர், ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் இக்சான் ஃபாண்டி மூலம் ஆட்டத்தைச் சமன் செய்தது.
சிங்கப்பூர் ஆகக் கடைசியாக 2012ஆம் ஆண்டில் சுசுகி கிண்ணத்தை வென்றது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிச்
சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பு அதற்குக் கிடைத்துள்ளது. கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்
படுத்தி, சொந்த மண்ணில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறுவதே சிங்கப்பூர் குழுவின் இலக்கு.

