மான்செஸ்டர்: பிரென்ட்ஃபர்ட் குழுவுக்கு எதிராக கடந்த
வியாழக்கிழமையன்று மான்செஸ்டர் யுனைடெட் களமிறங்கி 3-1 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது.
ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குப் பதிலாக ஹென்ரி மெக்வாயர் மாற்று ஆட்டக்காரராகக் களமிறக்கப்பட்டார். யுனைடெட் குழுவின் இடைக்கால நிர்வாகியான ரால்ஃப் ரானிக்கின் இந்த முடிவு, நட்சத்திர வீரர் ரொனால்டோவை அதிருப்தி அடையச் செய்தது.
தமது கோபத்தை அவர் வெளிப்படையாகக் காட்டினார்.
இந்நிலையில், ரொனால்டோ நடந்துகொண்ட விதத்தைப் பெரிதுபடுத்தப்போவதில்லை என்று ரானிக் தெரிவித்துள்ளார்.
"ரொனால்டோவை நான் குறைகூறப்போவதில்லை. ஆனால் தனக்குப் பதிலாக மாற்று ஆட்டக்காரர் களமிறக்கப்படும்போது ஆட்டக்காரர்கள் உணர்ச்சிவசப்
படக்கூடாது. அதுவே ஒவ்வொரு நிர்வாகியின் விருப்பமாக இருக்கும்.
"அதுமட்டுமல்லாது, ஆட்டக்காரர்களின் இத்தகைய செயல்களைத் தொலைக்காட்சி மூலம் பலர் பார்க்கின்றனர். இதனால் யாருக்கும் எவ்விதப் பலனும் இல்லை. ஆட்டக்காரர்கள் உணர்ச்சிவசப்பட்டு இவ்வாறு நடந்துகொள்ளும்போது அதை நான் பெரிதுபடுத்துவதில்லை," என்றார் ரானிக்.