2029ல் சிங்கப்பூரில் நடைபெறும்

2029ல் சிங்கப்பூரில் நடைபெறும்

1 mins read
083b15f7-4645-4fa2-b9ab-21d332afa073
ஹனோய் நகரில் நேற்றிரவு நடந்த தொடக்கவிழாவில் கண்ணைக் கவர்ந்த வியட்னாம் மங்கையரின் கலைப்படைப்பு. படம்: ஏஎஃப்பி -

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் வியட்னாமில் அதிகாரபூர்வமாகத் தொடங்கின

வரும் 2029ஆம் ஆண்டு 35வது முறை­யாக இடம்­பெ­றும் தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­களை சிங்­கப்­பூர் ஏற்று நடத்­தும் என்று சிங்­கப்­பூர் தேசிய ஒலிம்­பிக் மன்­ற­மும் ஸ்போர்ட் சிங்­கப்­பூர் அமைப்­பும் நேற்று ஒரு கூட்­ட­றிக்கை மூலம் தெரி­வித்­தன.

தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்டுப் போட்­டி­களை சிங்­கப்­பூர் ஏற்று நடத்­த­வி­ருப்­பது இது ஐந்­தா­வது முறை.

ஈராண்­டு­க­ளுக்கு ஒரு­முறை நடத்­தப்­படும் இப்­போட்­டி­கள், இதற்கு­முன் 1973, 1983, 1993, 2015 ஆகிய ஆண்­டு­களில் சிங்­கப்­பூ­ரில் இடம்­பெற்­றன.

கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த போட்­டி­களில், முன்­னில்­லாத வகை­யில் சிங்­கப்­பூர் 84 தங்­கம், 73 வெள்ளி, 102 வெண்­க­லம் என மொத்­தம் 259 பதக்­கங்­க­ளைக் கைப்­பற்றி, பட்­டி­ய­லில் இரண்­டா­ம் இடத்தைப் பிடித்­தது.

முதன்­மு­றை­யாக 1959ஆம் ஆண்­டில் தென்­கிழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­கள் நடை­பெற்­றன.

வியட்­னாம் தலை­ந­கர் ஹனோ­யில் 31வது தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­க­ளின் தொடக்­க­விழா நேற்று பிரம்­மாண்­ட­மாக நடந்­தே­றி­யது.

அதற்கு முன்­ன­தாக தென்­கிழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­கள் கூட்­ட­மைப்பு உறுப்­பினர்­களின் கூட்­டம் நடை­பெற்­றது.

அதில் வரும் ஆண்டு­களில் எந்த நாடு­களில் போட்­டி­களை நடத்­து­வது என்­பது முடி­வு­செய்­யப்­பட்டது.

அதன்­படி, 2027ஆம் ஆண்­டில் 34வது தென்­கிழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­கள் மலே­சி­யா­வில் நடை­பெ­ற­வுள்­ளன.

2023ஆம் ஆண்டில் கம்­போ­டி­யா­வும் 2025ஆம் ஆண்டில் தாய்­லாந்­தும் அப்­போட்­டி­களை ஏற்று நடத்­த­விருக்­கின்­றன.