காற்பந்து: கைகூடாத அரையிறுதி வாய்ப்பு

காற்பந்து: கைகூடாத அரையிறுதி வாய்ப்பு

2 mins read

நாம் தின்: தொடர்ந்து நான்­கா­வது முறை­யாக தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டுப் போட்­டி­கள் காற்­பந்­தில் முதல் சுற்­று­டன் வெளி­யே­றி­யது 23 வய­திற்­குட்­டோ­ருக்­கான சிங்­கப்­பூர் குழு.

'பி' பிரி­வில் இடம்­பெற்ற சிங்­கப்­பூர் குழு, கட்­டா­யம் வென்றே ஆக வேண்­டும் என்ற நிலை­யில் மலே­சி­யாவை நேற்று மாலை எதிர்­கொண்­டது. ஆனால், அந்த ஆட்­டம் 2-2 என்ற கோல் கணக்­கில் சம­நி­லை­யில் முடிந்­தது.

ஆட்­டத்­தின் 4வது நிமி­டத்­தில் கோல் அ­டித்து மலே­சியா முன்­னி­லைக்­குச் சென்­றது. ஆனா­லும், அதன்­பின் மூன்று நிமி­டங்­க­ளி­லேயே ஷா ஷாஹி­ரான் பதில் கோல­டித்து ஆட்­டத்தைச் சம­நிலைக்­குக் கொண்டு வந்­தார்.

பிற்­பாதி ஆட்­டத்­தின்­போது 77வது நிமி­டத்­தில் ஸ்டூ­வர்ட் வலைக்கு மிக அரு­கி­லி­ருந்து கோல­டித்து முன்­னிலை பெற்­றுத் தர, அரங்­கி­லி­ருந்த சிங்­கப்­பூர் ரசி­கர்­கள் உற்­சா­கம் அடைந்­த­னர்.

ஆனா­லும், அந்த மகிழ்ச்சி அடுத்த ஐந்து நிமி­டங்­களே நீடித்­தது. 82வது நிமி­டத்­தில் கிடைத்த கார்­னர் வாய்ப்பு மூலம் அரு­மை­யா­ன­தொரு கோலைப் போட்­டார் மலே­சி­யா­வின் ஃபைஸ்.

அதன்­பின் நடந்த இன்­னோர் ஆட்­டத்­தில் தாய்­லாந்து 5-0 என்ற கோல் கணக்­கில் கம்­போ­டி­யாவை வென்­றது. இதன்­மூ­லம் ஆறு புள்­ளி­க­ளு­டன் அக்­குழு பட்­டி­ய­லில் இரண்­டா­மிடத்திற்கு முன்னேறியது.

இது­வரை மூன்று ஆட்­டங்­களில் ஆடி­யி­ருக்­கும் மலே­சியா ஏழு புள்­ளி­களு­டன் முத­லி­டத்­தில் உள்­ளது. நான்கு ஆட்டங்கள் முடிவில் சிங்கப்பூர் ஐந்து புள்ளிகளுடன் மூன்றாமிடம் பிடித்தது.

இம்­மு­றை­யும் அரை­யி­றுதி வாய்ப்பு கைகூ­டா­மல் போன­தற்­காக ரசி­கர்­களி­டம் மன்­னிப்பு கேட்­டுக்­கொண்­டார் சிங்­கப்­பூர் குழு­வின் தலை­மைப் பயிற்று­விப்­பா­ளர் நஸ்ரி நசீர்.

"ஒரு பயிற்­று­ந­ராக, எனது குழுவை அடுத்த சுற்­றுக்கு முன்­னேற்­றத் தவறி­விட்­டேன். ஆத­லால், ரசி­கர்­க­ளி­டம் நான் மன்­னிப்பு கோரு­கி­றேன். அதே வேளையில், நம் ஆட்டக்காரர்களின் செயல்பாடு நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது," என்றார் அவர்.