ஹனோய்: சிங்கப்பூரின் பூப்பந்து நட்சத்திர வீரரான லோ கியன் இயூ தென்கிழக்காசிய விளையாட்டுகளுக்கான ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச்
சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
இதன்மூலம் அவருக்குக் குறைந்தது வெண்கலப் பதக்கமாவது கிடைக்கும் என்பது உறுதியாகிவிட்டது.
உலகத் தரவரிசையில் பத்தாவது இடத்தில் இருக்கும் லோ, பிலிப்பீன்ஸ் வீரரை 21-7, 21-8 எனும் நேர்செட்டுகளில் தோற்கடித்தார்.
அரையிறுதிச் சுற்றில் வியட்னாமின் நுயென் தியேன் மின்னை அவர் சந்திக்க இருக்கிறார்.
இப்பிரிவின் மற்றோர் அரை
யிறுதியில் சிங்கப்பூரில் ஜேசன் டே களமிறங்குகிறார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் சிங்கப்பூரின் இயோ ஜியா மின் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறினார்.
தாய்லாந்து வீராங்கனை பிட்டயாபோர்ன் சைவானிடம் அவர் 21-12, 21-16 எனும் நேர்செட்டுகளில் போராடித் தோற்றார்.