ஹனோய்: தென்கிழக்காசிய விளையாட்டுகளில் ஆண்களுக்கான காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு தாய்லாந்தும் வியட்னாமும் தகுதி பெற்றுள்ளன.
வியட்னாமுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான அரையிறுதி ஆட்டம் கூடுதல் நேரம் வரை சென்றது.
இதில் வியட்னாம் 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது.
மற்றோர் ஆட்டத்தில் இந்தோனீசியாவுடன் தாய்லாந்து மோதியது. இந்த ஆட்டமும் கூடுதல் நேரம் வரை சென்றது. கூடுதல் நேரத்தில் தாய்லாந்து கோல் போட்டு முன்னிலை வகித்தபோது ஆட்டம் முடிய சில நிமிடங்கள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், தப்பாட்டங்களும் இரு
தரப்பு ஆட்டக்காரர்களுக்கிடையே கைகலப்பும் நிகழ்ந்தன. இதன் காரணமாக இந்தோனீசியாவின் இரண்டு ஆட்டக்காரர்களுக்கும் தாய்லாந்தின் ஓர் ஆட்டக்காரருக்கும் சிவப்பு அட்டை காட்டப்பட்டது.