இஸ்தான்புல்: துருக்கியில் நடைபெற்ற மகளிருக்கான உலகக்
குத்துச் சண்டைப் போட்டியில் இந்தியாவின் நிகாத் ஸரீன் வாகை சூடிஉள்ளார். உலகக் குத்துச்சண்டை போட்டியில் மாபெரும் வெற்றியாளர் பட்டத்தை வென்ற ஐந்தாவது இந்திய வீராங்கனை எனும் பெருமை
ஸரீனைச் சேரும். நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தாய்லாந்து வீராங்கனையை 5-0 எனும் புள்ளிக்கணக்கில் ஸரீன் வீழ்த்தினார்.
இதற்கு முன்பு ஆகக் கடைசியாக 2018ஆம் ஆண்டில் இந்தியாவுக்காக மேரி கோம் இப்போட்டியில் தங்கம் வென்றார்.