பேங்காக்: தாய்லாந்து பேட்மிண்டன் பொதுவிருது மகளிர் ஒற்றை யில் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிச்சுற்றில் தோல்வி கண்டாா்.
தரவரிசையில் 6ஆம் இடத்தில் இருந்த சிந்து 17-21, 16-21 என்ற நோ் செட்டுகளில், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனும் சீன வீராங்கனையுமான சென் யு ஃபெய்யிடம் தோற் றார்.
இந்த ஆட்டத்தை 43 நிமிடங்களில் முடிவுக்குக் கொண்டுவந்தாா் ஃபெய்.
இதற்கு முன் 2019ஆம் ஆண்டி லும் ஃபெய்யிடம் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாா் சிந்து. இந்த ஆட்டத்துக்கு முன் 10 முறை ஃபெய்யை சந்தித்திருந்த சிந்து, அதில் 6ல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா்.
ஆனால், இந்த 11ஆவது ஆட்டத்தில் சிந்துவுக்கு சவால் அளிக்கும் வகையில் ஆக்ரோஷமாக ஆடினாா் ஃபெய். தனது வழக்கமான ஆட்டத்திலிருந்து சற்றே தடுமாறிய சிந்து, பலமுறை தவறுகள் செய்தாா்.
புள்ளிகளை முதலில் கைப்பற்றியது சிந்துவாக இருந்தாலும், நேரம் செல்லச் செல்ல ஃபெய் தனது தடுப்பாட்டத்தை வலுப்ப டுத்தி சிந்துவை தடுமாறச் செய் தார். அவ்வப்போது சிந்து மீண்டாலும் இறுதியில் ஃபெய் வசமானது வெற்றி.